சனி, 13 பிப்ரவரி, 2021

வளைகாப்பு மண்டபம் - 7: மன்னர் சிலைகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளைகாப்பு மண்டபத்தின் நடுவில் உள்ள மேடை நான்கு தூண்கள் கொண்டது. அவற்றில் ஒன்றையொன்று பார்த்தவாறு திசைக்கு இரண்டாக எட்டு தூண் உயரச் சிலைகள் உள்ளன.

கிழக்கில் உள்ள இரு தூண்களில் ஒருவரை ஒருவர் நோக்கியவாறு இரு மன்னர்கள் சிலைகள் உள்ளன.


திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகில் நெடுங்குணம் யோக ராமர் கோயில் செங்கமலவல்லி தாயார் முன் மண்டபத்தில் இரு தூண்களில் எதிர் எதிராக இதே போன்ற அரசர்கள் இருவரது சிலைகள் உள்ளன.

நீண்ட தொப்பி போன்ற அமைப்பு 

வளைகாப்பு மண்டபம் - 6: பெண்டிரும் வாயிற்காவலரும்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளைகாப்பு மண்டபத்தின் நடுவில் உள்ள மேடை நான்கு தூண்கள் கொண்டது. அவற்றில் ஒன்றையொன்று பார்த்தவாறு திசைக்கு இரண்டாக எட்டு தூண் உயரச் சிலைகள் உள்ளன.

வடக்குத் தூண்கள்: தாலம் ஏந்திய பெண்டிர்


முதல் பார்வைக்கு ஒன்று போல் தெரிந்தாலும் '6 வித்தியாசங்கள் காண்க' போன்ற முறைமையில் நுட்பமாக ஆராய்ந்தால்  உடல் பருமன், கொண்டை, அணிகள், ஆடைகள் என வேறுபாடுகள் பல காணலாம்.

தெற்குத் தூண்கள்: வாயிற்காவலர்கள் 

சிவகங்கை குளத்தை நோக்கிய தெற்குத் தூண்களில் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு வாயிற்காவலர் சிலைகள் உள்ளன.


வளைகாப்பு மண்டபத்தின் படிகள் தற்போது மேற்கில் அமைந்திருந்தாலும் வாயிற்காவலர் சிலைகள் தெற்கில் இருப்பதைக்கொண்டு இந்த மண்டபம் தெற்கில் உள்ள சிவகங்கை மண்டபத்தை நோக்கியது என்று அறியலாம். மேலும் தற்போது இந்த மண்டபம் உண்ணாமுலை அம்மனின் வளைகாப்பு வைபவத்திற்கு பயன்பட்டாலும் வாயிற்காவலர்கள் ஆண்களாக இருப்பதால் இது அண்ணமலையார், உண்ணாமலை அம்மன் இருவருக்குமான ஊஞ்சல் மண்டபமாக இருந்திருக்கலாம். 


வியாழன், 11 பிப்ரவரி, 2021

வளைகாப்பு மண்டபம் - 4: புலிக்கால் முனிவர் (வியாக்கிரபாதர்)

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளைகாப்பு மண்டபத்தில் வெளிப்புறம் உள்ள 12 தூண்களில் வடமேற்கு மூலைத் தூணில் உள்ளது புலிக்கால் முனிவரின் தூண் உயர அழகிய சிற்பம். இவர் வடமொழியில் வியாக்கிரபாதர் என்று அழைக்கப்படுகிறார். வியாக்கிரம் என்றால் புலி.  மனித உடலும் புலியின் கால்களும் உடையவர் ஆதலால் இந்த காரணப் பெயர் பெற்றார்.



வியாக்கிரபாதர் எனும் புலிக்கால் முனிவர் மகரத்தின் மேல் கைகூப்பி வணங்கிய நிலையில் உள்ளார். 

புராணம் 

புலிக்கால் முனிவரின் இயற்பெயர் மழன். மழன் சிறந்த சிவபக்தர். சிவனுக்குத் தூய மலர்களைச் சூட்ட வேண்டிப்  பொழுது விடியுமுன் மலர்களைப் பறிக்க எண்ணினார். அதற்காக  இறைவனை வேண்டி இரவுப் பார்வையும்,  மரம் ஏற புலிக்கால்களும் பெற்றார். 

அவரும் பதஞ்சலி முனிவரும் விரும்பியவாறு தைப்பூச நாளில் சிதம்பரத்தில் இறைவன் அவர்கள் காண ஆனந்தத் தாண்டவம் ஆடினார். 

பிரம்மபுரீசுவரர்  கோயிலுக்காக அறியப்பட்ட திருப்பட்டூரில் இவர் ஜீவ சமாதி அடைந்தார்.