வளைகாப்பு மண்டபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வளைகாப்பு மண்டபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 11 பிப்ரவரி, 2021

வளைகாப்பு மண்டபம் - 4: புலிக்கால் முனிவர் (வியாக்கிரபாதர்)

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளைகாப்பு மண்டபத்தில் வெளிப்புறம் உள்ள 12 தூண்களில் வடமேற்கு மூலைத் தூணில் உள்ளது புலிக்கால் முனிவரின் தூண் உயர அழகிய சிற்பம். இவர் வடமொழியில் வியாக்கிரபாதர் என்று அழைக்கப்படுகிறார். வியாக்கிரம் என்றால் புலி.  மனித உடலும் புலியின் கால்களும் உடையவர் ஆதலால் இந்த காரணப் பெயர் பெற்றார்.



வியாக்கிரபாதர் எனும் புலிக்கால் முனிவர் மகரத்தின் மேல் கைகூப்பி வணங்கிய நிலையில் உள்ளார். 

புராணம் 

புலிக்கால் முனிவரின் இயற்பெயர் மழன். மழன் சிறந்த சிவபக்தர். சிவனுக்குத் தூய மலர்களைச் சூட்ட வேண்டிப்  பொழுது விடியுமுன் மலர்களைப் பறிக்க எண்ணினார். அதற்காக  இறைவனை வேண்டி இரவுப் பார்வையும்,  மரம் ஏற புலிக்கால்களும் பெற்றார். 

அவரும் பதஞ்சலி முனிவரும் விரும்பியவாறு தைப்பூச நாளில் சிதம்பரத்தில் இறைவன் அவர்கள் காண ஆனந்தத் தாண்டவம் ஆடினார். 

பிரம்மபுரீசுவரர்  கோயிலுக்காக அறியப்பட்ட திருப்பட்டூரில் இவர் ஜீவ சமாதி அடைந்தார். 

வியாழன், 23 ஜனவரி, 2020

வளைகாப்பு மண்டபம் - 9: வெளித் தூண் சிறு சிற்பங்கள்

வளைகாப்பு மண்டபத்தில் வெளித் தூண்களில் உள்ள பெரிய அழகிய சிற்பங்களை முன் பதிவுகளில் பார்த்தோம்.

துர்க்கை சிற்பங்கள்:
வளைகாப்பு மண்டபம் 2: அவுணன் தலைமிசை நின்ற தையல்

புலிக்கால் முனிவர் (வியாக்கிரபாதர்):
வளைகாப்பு மண்டபம்: 4. தூணுயரச் சிலைகள்

வெளித்தூண்களில் உள்ள சில சிறு தூண் சிற்பங்களை இங்கு பார்ப்போம்.

பெண்
கருக்கு 
கின்னரர்
அய்யனார்
ராமன், அனுமன் 
இரண்யவதம் 
கால சமஹார மூர்த்தி 
ராமர் - கோதண்டபாணி 
கோவர்தனத்தாரி
கருடன்
காளிங்க நர்த்தனம்
பிராம்மி 


வீரபத்திரர்
லட்சுமி நாராயணர் 
பிரம்மா
யோக தட்சிணாமூர்த்தி 
பெண்



சிம்மமும் யோக நரசிம்மரும் 
 













செவ்வாய், 21 ஜனவரி, 2020

வளைகாப்பு மண்டபம் - 8: உள் தூண் சிறு சிற்பங்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளைகாப்பு மண்டபத்தின் நடுவில் உள்ள மேடை நான்கு தூண்கள் கொண்டது. அவற்றில் ஒவ்வொன்றிலும் இரு பக்கங்களில் அமைந்த தூண் உயரச் சிலைகள் பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இந்தப் பதிவில் அதே தூண்களில் மற்ற இரு பக்கங்களில் உள்ள சிறு சிற்பங்களைப் பார்க்கலாம்

உள் தென்மேற்குத் தூண் 

உள் தென்மேற்குத் தூண் - மேற்குப் பக்கம் 
  • இந்த தூணின் வடக்குப் பக்கம் மன்மதன், கிழக்குப் பக்கம் வாயிற்காவலர். மேற்குப் பக்கத்தில் முதன்மைத் தூணின் வடிவம் நன்கு தெரிகிறது. 
  • மூன்று சதுரங்கள் இடையே இரண்டு எண்பட்டைக் கட்டுகள். மூன்று சதுரங்களிலும் சிற்பங்கள். 
  • மேலே பாலகிருஷ்ணன். நடுவில் விநாயகர். 
  • கீழ் சதுரம் மற்றவற்றைவிட சிறப்பானது. அதன் மேல்பக்கம் நான்கு மூலைகளிலும் நாகபந்தங்கள் உள்ளன. இரு அழகிய பெண்களின் சிற்பங்கள். இசைக் கருவிகளுடன். அழகிய ஆடை அணிகள், கூந்தல் அலங்காரம். இந்த சிற்பங்கள் சதுரத்துள் அடங்காமல் தனித்திருப்பது சிறப்பு. 
  • முன்புறம் மன்மதன் காலுக்கு அருகில் ஒரு பெண்ணின் சிறு சிற்பம். நீண்ட கழி ஒன்றை ஏந்தியவாறு. அக்கழியின் மீது மன்மதன் முழங்கை ஊன்றியுள்ளது போல உள்ளது. 
  • எண்கோணக் கட்டுகளை தாமரைக் கட்டும் அதிலிருந்து தொங்கும் பதக்கங்களுடன் கூடிய மணிமாலைச் சரங்களும்.அலங்கரிக்கின்றன.
உள் தென்மேற்குத் தூண் - தெற்குப் பக்கம் - சரபர், பிச்சாண்டவர் 

  • மேல் சதுரத்தில் இரு   யானைகள். நடு சதுரத்தில் நரசிம்மரை அடக்கும் சிவ அவதாரமான சரபேசுவரர். (விவரம் காண சொடுக்குக:
    https://arunai-aalayam.blogspot.com/2018/12/blog-post_18.html
  • கீழ் சதுரத்தில் அழகிய பிச்சாண்டவர் சிலை. ஜடாமண்டலம் எனும் அழகிய முடியமைப்பு. ஆடையிலா திருக்கோலம். வலது முன்கை மானுக்கு புல் ஊட்ட, இடது முன் கையில் கபாலம். வலது பின் கை உடுக்கை தாங்க இடது பின் கை கழுத்திற்கு பின்பாக பிடித்திருப்பது தெரியவில்லை , சூலம் மரபு. இடது புறம் பிரம்மஹத்தி பூதம். அதன் பக்கத்தில் ஆடை நழுவியது தெரியாமல்  அவர் அழகில் சொக்கிக் கிடக்கும் தாருகவன முனிபத்தினிகளுள் ஒருவர். முனிபத்தினிகளையும் மயக்கிய பேரழகன் சிற்பம் மன்மதன் தூணில் அமைந்திருப்பது என்ன பொருத்தம். 
தென் கிழக்குத் தூண் -தெற்கு முகம் 

  • நடு சதுரத்தில் 
  • கீழ் சதுரத்தில்  துர்க்கை. பின்னால் வாகனமாகிய சிங்கம். 
  • எட்டு கரங்கள். முன் கரங்கள் காக்கும் கை, ஊரு  ஹஸ்தம். மேல் கைகளில் ஆழியும் , சங்கும். இரு கரங்களில் வாள், கேடயம். மற்ற இரு கைகளில் இருப்பது தெரியவில்லை.


உள் தென்கிழக்கு தூண் - கிழக்கு முகம் 
  • அரசர் சிலை பக்கத்தில் எளிய குடிமக்கள். 
  • கீழ் சதுரத்தில் வாள் கேடயத்துடன் ஒரு வீரன். நடு சதுரத்தில் ஆட்டக் கலைஞன் ஒருவன்.
வடகிழக்குத் தூண் - தெற்கு முகம் 

உள் வடகிழக்குத் தூண் - வடக்கு முகம் 
  • கீழே சுரம் நீக்கும் பரமன் - ஜ்வரபக்ன மூர்த்தி. இச்சிற்பத்தைப் பற்றி தனி இடதுகை உள்ளது: https://arunai-aalayam.blogspot.com/2018/12/3.html
  • நடுச்சதுரத்தில் கால பைரவர்.  சுடர்முடி (ஜ்வாலா மகுடம். 8 கரங்கள்.
வடமேற்குத் தூண் - வடக்கு முகம்

வடமேற்குத் தூண் - மேற்கு முகம் 
 





வெள்ளி, 17 ஜனவரி, 2020

வளைகாப்பு மண்டபம் - 5:. மன்மதன், ரதி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளைகாப்பு மண்டபத்தின் நடுவில் உள்ள மேடை  நான்கு தூண்கள்  கொண்டது. அவற்றில் ஒன்றையொன்று பார்த்தவாறு திசைக்கு இரண்டாக எட்டு தூண் உயரச் சிலைகள் உள்ளன. மேற்குப் பக்கம் உள்ள இரு தூண்களில் ரதியும் மன்மதனும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு உள்ளனர்.

மன்மதன்: வளைகாப்பு மண்டபம் 

மன்மதன்:வளைகாப்பு மண்டபம் 

இடது கையில் கரும்பு வில், வலது கையில் மலரம்புடன் மன்மதன்.  எதிர் தூணில் அழகிய ஆடை ஆபரணங்களோடு ரதி, பணிப்பெண்ணுடன்.


இதைவிட சிற்றிடைகொண்ட வேறு சிலை உள்ளதா? 
வலது கையில் ஏந்திய மலர் உடைந்துள்ளது.

புராணம் 

பிரம்மன் படைப்பைத் தொடங்கிய காலத்தில் அவர் மனதில் இருந்து தோன்றியவன் காமன் எனும் மன்மதன். அவன் தன மலரம்பை பிரம்மன் மீதே விட்டு சோதனை செய்ய, அவர் தன் மகளான சந்தியாவின் மீதே ஆசை கொண்டார். அவள் தற்கொலை செய்துகொண்டு தட்சனின் வியர்வைத் துளியிலிருந்து பெண்ணழகின் உச்சமாக ரதியாகத் தோன்றி மன்மதனின் துணைவி ஆனாள். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிவ தவத்தை தன் மலர்ப்பாணங்களால் கலைத்து முக்கண் நெருப்பில் சாம்பலானான் மன்மதன். ரதியின் மன்றாடல்களால் அவளுக்கு மட்டுமே உரு ஆகும் அருவமாக உயிர்தெழுந்தான். 

மன்மதன், ரதி இருவருக்குமே கிளியே வாகனம். 

மன்மதனது மலரம்புகள் ஐந்து - தாமரை, முல்லை, அசோகம், மாம்பூ, நீலோத்பலம் எனும் நீல அல்லி.


கூடுதல் வாசிப்பிற்கு 

மன்மதன்,காம தேவன்: சங்கத் தமிழ் இலக்கியத்தில் காதல் தெய்வம்!

மன்மதன் ரதி சிலைகளின் நுண்ணிய வர்ணனைகளுக்காக:


நன்றிக்கடன் 


திங்கள், 24 டிசம்பர், 2018

வளைகாப்பு மண்டபம் 3: சுரம் நீக்கும் பரமன்

ஜ்வரபக்ன மூர்த்தி எனப்படும் சுரம் நீக்கும் பரமன் 64 சிவ மூர்த்தங்களுள் ஒன்று. அரிதாகவே காணப்படும் இந்த மூர்த்தம், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளைகாப்பு மண்டபத்தின் நடுவே உள்ள மேடையின் நான்கு தூண்களில் வடகிழக்குத் தூணிண் அடிப்பகுதியில் வடக்கு (1000 கால் மண்டபத்தை) நோக்கியுள்ளது. 

சுரம் நீக்கும் பரமன் (ஜ்வரபக்ன மூர்த்தி): வளைகாப்பு மண்டபம்

தூக்கிய இடது திருவடி, வீசிய முன் இடது கை, தழல் ஏந்திய இடது பின்கை இவற்றால் முதலில் நடராஜர் திருவடிவம் போலத் தோன்றினாலும் இந்த திருவடிவம் 3 முகங்களும், 3 கைகளும் 3 கால்களும் உடையது. 

ஜ்வரபக்ன மூர்த்தியை வழிபட்டால் சுரம் தீரும் என்று நம்பப்படுகிறது. இந்தத் திருவடிவம் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், நாகப்பட்டினம் அருகிலுள்ள சாட்டியாங்குடி, ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேசுவரர் கோயில், திருவில்லிபுத்தூர் வைத்தியநாதசுவாமி கோயில் போன்ற குறிப்பிட்ட சில தலங்களில் மட்டுமே காணப்பெறுவது என்று திரு இரா. இராமகிருட்டினன் தனது 'அஷ்டாங்க மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். 


இத்திருவடிவத்தின் பின் உள்ள புராணக்கதை என்ன? மகாபாரத காலத்தில் வாழ்ந்தவன் ஆயிரம் கைகளுடைய வாணாசுரன். திருமாலின் ஐந்தாம் அவதாரமாகிய வாமனருக்கு மூன்று அடி மண் கொடுத்த மகாபலியின் மகன். சிறந்த சிவபக்தனான இவனது வேண்டுதலுக்கு சிவன் இணங்கி , பார்வதி, கணேசர், முருகரோடு அவன் அரண்மனையில் தங்கி இருந்தார். தன் மகள் உஷை கண்ணனின் மகன் அநிருத்தனை காதலிப்பது அறிந்த வாணாசுரன் அநிருத்தனைச் சிறையிலிட்டான். தன் மகனை மீட்க வந்த கண்ணன் முதலில் அங்கிருந்த சிவனுடன் போரிட வேண்டியதாயிற்று. கண்ணனுடன் களிப்போர் புரிந்த சிவன் பின்பு விலகி வழிவிட கண்ணன் வாணாசுரனின் 998 கைகளை வெட்டி வெற்றிகொண்டான். அநிருத்தன் உஷையை மணந்தான். சிவனருளால் வாணாசுரன் இழந்த கைகளைத் திரும்பப் பெற்றான். சிவனுக்கும் கண்ணனுக்கும் இடையேயானப் போரின்போது கண்ணன் சிவன்மீது குளிர் சுரத்தை ஏவினான். வெம்மை சுரத்தை ஏவி சிவன் அதை முறியடித்தான். அதுவே ஜ்வரபக்ன மூர்த்தி எனப்படும் சுரம் நீக்கும் பரமன் திருவடிவம்.


துணைநூல்கள், சுட்டிகள்:

  1. அஷ்டாங்க மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்' - இரா. இராமகிருட்டினன்; நர்மதா பதிப்பகம்; 2016
  2. தமிழ் விக்கிப்பீடியா - சுரம் நீக்கும் பரமன்
  3. தினமலர் கோயில்கள் - சிவவடிவங்கள் ஜ்வரபக்ன மூர்த்தி



ஞாயிறு, 23 டிசம்பர், 2018

வளைகாப்பு மண்டபம் 2: அவுணன் தலைமிசை நின்ற தையல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சிறப்புமிக்க கொற்றவை (துர்க்கை) சிற்பங்கள் ராஜகோபுரத்தை அடுத்து உள்ள வளைகாப்பு மண்டபத்தில் அமைந்துள்ளன. 

மகிஷனுடன் போருக்கு எழும் கொற்றவை

தென்மேற்கு மூலைத் தூணின் மேற்குப் பக்கம் கீழே உள்ளது இந்த சிற்பம். வால் தூக்கி, விரைந்து நடக்கும் சிங்கத்தின் மேல் அமர்ந்து கைகளில் சங்கும், சக்கரமும். கேடயமும், ஓங்கிய வாளுமாக போருக்கெழும் துர்க்கை. 


வளைகாப்பு மண்டபம்

மகிஷனுடன் போரிடும் துர்க்கை 

வடமேற்கு மூலைத் தூணின் மேற்குப் பக்கம் கீழே உள்ளது இந்த சிற்பம். வழக்கமான தூண் புடைப்புச் சிற்பமாக இல்லாமல் ஏறத்தாழ தனிச்சிற்பமாகவே உள்ளது இதன் ஒரு சிறப்பு.

வளைகாப்பு மண்டபம்

வளைகாப்பு மண்டபம்

யானை ஒன்றின் தலையை துர்க்கையின் வாகனமாகிய சிம்மம் முன்னிரு கால்களாலும், அதன் முதுகை இடது பின்னங்காலாலும்  பிடித்திருக்கிறது. சிம்மத்தின் மீது அமர்ந்துள்ள துர்க்கை பின்னிரு கரங்களில் சங்கும், சக்கரமும் ஏந்தியுள்ளாள். முன் இடது கை வில்லைப் பிடித்திருக்க, முன் வலது கை பின் நோக்கி வளைந்து அம்பராத்தூணியிலிந்து அம்பை எடுக்கிறது. 

சிங்கம் மீதமர்ந்து வில்லேந்தி அம்பெடுக்கும் கொற்றவையின் உடல் அமைதி மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி குகை சுவர் சிற்பத்தின் துர்க்கையின் உடல் அமைதியைத் தழுவியுள்ளது. 

மகாபலிபுரம் மகிஷாசுரமர்த்தினி குகை 

அதில் துர்க்கைகு எட்டு கைகள், கணங்களும் அசுரர்களுமான போர்க்கள காட்சி என மற்ற விவரங்கள் வேறுபட்டாலும், துர்க்கையின் அடிப்படை உடல் அமைதி இரு சிற்பங்களிலும் ஒன்றே. சமகால படைப்புகளில் உருவ அமைதி ஒத்திருப்பது வழக்கம்தான். மாமல்லை சிற்பம் 7 ஆம் நூற்றாண்டில் உருவானது, திருவண்ணாமலை திருக்கோயில் சிற்பமோ ஒன்பது நூற்றாண்டுகள் பிந்தையது  என்னும்போது இந்த ஒற்றுமை வியப்புக்குறியது. பெண் தெய்வ உருவங்களை தடமுலைகளோடு அமைப்பது மரபாக இருக்கும்போது, திருவண்ணாமலை துர்க்கையின் சிறுத்த முலைகள் வியப்பை அளித்தது. பேராண்மையின் வெளிப்பாடோ? இதே மண்டபத்தில் உள்ள கீழே பதிவடப்பட்டுள்ள மற்ற இரண்டு துர்க்கை சிலைகளை ஒப்பிடும்போது இந்த வேறுபாடு தெளிவாகத் தெரியும். இதிலும் மகாபலிபுரம் துர்க்கையோடு ஒற்றுமை தெரிகிறது.

மேலும் திருவண்ணாமலை சிற்பம் யானையை பயன்படுத்தி சிங்கம், அதன்மீது அமர்ந்துள்ள துர்க்கை இருவரின் பேருருவத்தை நமக்குக் காட்டுகிறது.

'மகாபலிபுரம் மகிஷாசுரமர்த்தினி குகை' படம் - மூலம்:

https://commons.wikimedia.org/wiki/File:Mahabalipuram_Mahishasura_1.jpg#filelinks

கொற்றவையின் போர் நடனம்

தென்மேற்கு மூலைத் தூணின் தெற்குப் பக்கம் கீழே உள்ளது இந்த சிற்பம். நரசிம்மம் நிகழ்த்தும் இரண்யவதத்தை ஒத்த காட்சி.

வளைகாப்பு மண்டபம்

துர்க்கையின் இடதுகால் எருமையாகிய மகிஷனின் தலையை தரையோடு அழுத்தியுள்ளது. மற்றோரு கால் அவன் முதுகின்மேல். ஒரு கை எருமையின் வாலைபற்றி இழுக்க, வலது கை ஒன்றில் ஏந்திய குறு வாள் எருமையை குத்தி வெளிவருகிறது. இரு கைகளால் ஓங்கிய திரிசூலம் எருமையை குத்தித் துளைத்துக்கோண்டிருக்கிறது. மற்ற 4 கரங்களில் சக்கரம், தீ, சங்கு, கேடயம்.  நடராஜரையும், நரசிம்மரையும் ஒத்த ஒரு நடன அமைதி இந்த சிற்பத்தில் வெளிப்படுகிறது.

அவுணன்  தலைமிசை நின்ற தையல்

தீபதரிசன மண்டபத்தில் உள்ள தூண் சிற்பம் இது.


தீபதரிசன மண்டபம்

போர்வெறி தணிந்து மகிஷன் தலை மீது நின்று பின்னிரு கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்தி, முன் இடது கையை தொடையில் ஊரு ஹஸ்தமாய் ஊன்றி, வலது கையை அபய ஹஸ்தமாய் காட்டி அருள் புரியும் அன்னை. சக்கரமும், சங்கும் வழக்கமான இடம் மாறி இருக்கின்றன.

"இரண்டு வேறுருவில் திரண்டதோள் அவுணன்
தலைமிசை நின்ற தையல்"         - சிலப்பதிகாரம் 

(எருமைத் தலையும் மனித உடலும் ஆக இரண்டு வேறு உருவங்களின் கலவையான, திரண்ட தோள்களை உடைய அசுரன்  (அவுணன்) மகிஷாசுரனைக் கொன்று அவன் தலை மீது நின்ற பெண்)

அருள்பாலிக்கும் அன்னை

அசுரனை ஒழிந்து தன் சிங்க வாகனம் பின்னே நிற்க வலது முன்கரத்தில் அபய ஹஸ்தம் காட்டி அருள் பாலிக்கும் எண்கை துர்க்கை அன்னை.

வளைகாப்பு மண்டபம்

திட்டி வாசல் தூண்களில் துர்க்கை

ஒன்று போலத் தோன்றினாலும் சிறு வேறுபாடுகள் உள்ளன. 








காண்க:

சனி, 22 டிசம்பர், 2018

வளைகாப்பு மண்டபம் - 1: அறிமுகம்

ராஜகோபுரத்தில் நுழைந்தால் ஐந்தாம் திருச்சுற்றில் இடதுபுறம் கம்பத்திளையனார் சந்நிதி. அதன் பின்னால் சிவகங்கை திருக்குளத்தின் வடக்கே இருக்கும் 16 கால் மண்டபம்தான் வளைகாப்பு மண்டபம்.


வளைகாப்பு மண்டபம்

இது திருக்கோயிலில் உள்ள எழிலார்ந்த மண்டபங்களில் ஒன்று. ஆடி மாதம் நிகழும் பத்துநாள் பராசக்தி உற்சவத்தின் இறுதி நாளான ஆடிப்பூரத்தினன்று இந்த மண்டபத்தில்தான் அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறும்.

தற்போது மண்டபம் இரும்பு வேலியால் மூடப்பட்டு நுழைவு வாயில் மேற்கு நோக்கி உள்ளது. அங்கு உள்ள நான்கு கற்படிகள் பிற்கால இணைப்புகளாகத் தோன்றுகின்றன. வாயிற்காவலர் (துவாரபாலகர்) சிலைகள் தெற்கே உள்ளன. எனவே இந்த மண்டபம் தெற்கே சிவகங்கை திருக்குளத்தை நோக்கி அமைக்கப்பட்டது என்று கருதலாம்.

1. சதுரமான அதிஷ்டானம் எனப்படும் தாங்குதள மேடை. 



தாங்குதளத்தின் 'கண்டம்' என்னும் கழுத்துப் பகுதியில் சிற்ப வரிசை இருப்பதைக் காணலாம், 

2. அதன் மீது வெளிச் சுற்றில் 12 தூண்கள்.   

3.பிரஸ்தரம் எனப்படும் மண்டபக்கூரை. அதன் வெளிப்புறம் கூரையின் ஓரத்தில் இருந்து வெளியே நீட்டிக்கொண்டுள்ள வளைந்த அமைப்பு (1) கபோதம் எனப்படும். அதன் மீது கொடிக் கருக்கு அலங்காரங்கள் உள்ளதை காண்க. கபோதத்தின் மீது உள்ளது யாளி வரி (2). அதில் யாளிகளும் சிங்கங்களும் வரிசையாய் செதுக்கப் பட்டுள்ளதைக் காண்க. தூண்கள் மீது அமர்ந்து கூரைப்பலகைகளைத் தாங்கும் உத்தரங்களும் வெறுமையாக இல்லாமல் இலைக்கருக்கு அணியால் அழகு செய்யப்பட்டிருப்பதைக் காண்க.



மண்டபத்தின் நடுவே சதுரமான கொலுமேடை. தாங்குதளம், அதன் 4 மூலைகளிலும் 4 தூண்கள், கூரை



மேடை மீதுள்ள கூரைப்பகுதி சுற்றியுள்ள கூரையைவிட உயர்ந்துள்ளது. அதன் நடுவில் பூ அலங்காரச் சிற்பம். சுற்றி இரும்பு வளையங்கள்.



வளைகாப்பு மண்டபத்தின் 16 தூண்களும் அழகிய சிற்பங்களால் அணிசெய்யப் பெற்றவை.

வளைகாப்பு மண்டபத்தினுள்  தெய்வச் சந்நிதி இல்லை. இருந்தாலும் மண்டபங்களுக்கு உரித்தான மேற்கண்ட மூன்று உறுப்புகளுடன் கூட, தெய்வச் சந்நிதிகளுக்கே உரித்தான விமானம் இந்த மண்டபத்தின் மீது அமைந்திருப்பது ஏன்?

அருணகிரிநாதருக்கும் சம்பந்தாண்டாருக்கும் இடையே பிரபுட தேவராயன் அவையில் ஏற்பட்ட வாதத்தில் முன்னவரின் அழைப்பை ஏற்று முருகர் வளைகாப்பு மண்டபத்தின் வடகிழக்கு மூலைத் தூணில்தான் காட்சி அளித்தார். இந்நிகழ்வின் அடையாளமாக அத்தூணில் உள்ள முருகரின் புடைப்புச் சிற்பம்தான் கம்பத்திளையனாராக வழிபடப் படுகிறது. அதன் காரணமாகவே இந்த மண்டபத்தின் மீது விமானம் அமைந்துள்ளது.