திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளைகாப்பு மண்டபத்தின் நடுவில் உள்ள மேடை நான்கு தூண்கள் கொண்டது. அவற்றில் ஒவ்வொன்றிலும் இரு பக்கங்களில் அமைந்த தூண் உயரச் சிலைகள் பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இந்தப் பதிவில் அதே தூண்களில் மற்ற இரு பக்கங்களில் உள்ள சிறு சிற்பங்களைப் பார்க்கலாம்
உள் தென்மேற்குத் தூண்
 |
| உள் தென்மேற்குத் தூண் - மேற்குப் பக்கம் |
- இந்த தூணின் வடக்குப் பக்கம் மன்மதன், கிழக்குப் பக்கம் வாயிற்காவலர். மேற்குப் பக்கத்தில் முதன்மைத் தூணின் வடிவம் நன்கு தெரிகிறது.
- மூன்று சதுரங்கள் இடையே இரண்டு எண்பட்டைக் கட்டுகள். மூன்று சதுரங்களிலும் சிற்பங்கள்.
- மேலே பாலகிருஷ்ணன். நடுவில் விநாயகர்.
- கீழ் சதுரம் மற்றவற்றைவிட சிறப்பானது. அதன் மேல்பக்கம் நான்கு மூலைகளிலும் நாகபந்தங்கள் உள்ளன. இரு அழகிய பெண்களின் சிற்பங்கள். இசைக் கருவிகளுடன். அழகிய ஆடை அணிகள், கூந்தல் அலங்காரம். இந்த சிற்பங்கள் சதுரத்துள் அடங்காமல் தனித்திருப்பது சிறப்பு.
- முன்புறம் மன்மதன் காலுக்கு அருகில் ஒரு பெண்ணின் சிறு சிற்பம். நீண்ட கழி ஒன்றை ஏந்தியவாறு. அக்கழியின் மீது மன்மதன் முழங்கை ஊன்றியுள்ளது போல உள்ளது.
- எண்கோணக் கட்டுகளை தாமரைக் கட்டும் அதிலிருந்து தொங்கும் பதக்கங்களுடன் கூடிய மணிமாலைச் சரங்களும்.அலங்கரிக்கின்றன.
 |
| உள் தென்மேற்குத் தூண் - தெற்குப் பக்கம் - சரபர், பிச்சாண்டவர் |
- மேல் சதுரத்தில் இரு யானைகள். நடு சதுரத்தில் நரசிம்மரை அடக்கும் சிவ அவதாரமான சரபேசுவரர். (விவரம் காண சொடுக்குக:
https://arunai-aalayam.blogspot.com/2018/12/blog-post_18.html
- கீழ் சதுரத்தில் அழகிய பிச்சாண்டவர் சிலை. ஜடாமண்டலம் எனும் அழகிய முடியமைப்பு. ஆடையிலா திருக்கோலம். வலது முன்கை மானுக்கு புல் ஊட்ட, இடது முன் கையில் கபாலம். வலது பின் கை உடுக்கை தாங்க இடது பின் கை கழுத்திற்கு பின்பாக பிடித்திருப்பது தெரியவில்லை , சூலம் மரபு. இடது புறம் பிரம்மஹத்தி பூதம். அதன் பக்கத்தில் ஆடை நழுவியது தெரியாமல் அவர் அழகில் சொக்கிக் கிடக்கும் தாருகவன முனிபத்தினிகளுள் ஒருவர். முனிபத்தினிகளையும் மயக்கிய பேரழகன் சிற்பம் மன்மதன் தூணில் அமைந்திருப்பது என்ன பொருத்தம்.
 |
| தென் கிழக்குத் தூண் -தெற்கு முகம் |
- நடு சதுரத்தில்
- கீழ் சதுரத்தில் துர்க்கை. பின்னால் வாகனமாகிய சிங்கம்.
- எட்டு கரங்கள். முன் கரங்கள் காக்கும் கை, ஊரு ஹஸ்தம். மேல் கைகளில் ஆழியும் , சங்கும். இரு கரங்களில் வாள், கேடயம். மற்ற இரு கைகளில் இருப்பது தெரியவில்லை.
 |
| உள் தென்கிழக்கு தூண் - கிழக்கு முகம் |
- அரசர் சிலை பக்கத்தில் எளிய குடிமக்கள்.
- கீழ் சதுரத்தில் வாள் கேடயத்துடன் ஒரு வீரன். நடு சதுரத்தில் ஆட்டக் கலைஞன் ஒருவன்.
 |
| வடகிழக்குத் தூண் - தெற்கு முகம் |
 |
| உள் வடகிழக்குத் தூண் - வடக்கு முகம் |
 |
| வடமேற்குத் தூண் - வடக்கு முகம் |
 |
| வடமேற்குத் தூண் - மேற்கு முகம் |
வளைகாப்பு மண்டபம் - மற்ற பதிவுகள்
"வளைகாப்பு மண்டபம் - 8:
பதிலளிநீக்குஉள் தூண் சிறு சிற்பங்கள்" - கட்டுரையில்
சிறு சிற்பங்களின்
அழகு அசர வைக்கிறது.
அருமை.